தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65 வயது) உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
இதனையடுத்து,தமிழக முதல்வர் ஸ்டாலின்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,திரைத்துறையினர் மற்றும் மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து,இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில்,கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.
எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்களை இயற்றிய ஐயா பிறைசூடன் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு. கண்ணீர் வணக்கம்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…