நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம்.! சல்மான்கான் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதற்கு சல்மான்கான், கரன்ஜோகர் உள்ளிட்ட பல பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சுசாந்த் சிங்கின் தாய்மாமா, சுசாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பு புகாரை அளித்திருந்தார். ஆனால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தற்கொலை என்பது சரியான முடிவு அல்ல என்ற விழிப்புணர்வை தனது படங்களின் மூலம் கூறியவர் எப்படி தற்கொலை செய்வார் என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்ததை அடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரின் மரணத்திற்கு நீதி கோரி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த் மரணத்திற்கு சல்மான்கான் உட்பட சினிமாவில் உள்ள 8பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞரான சுதீர் குமார் ஓஜா வழக்கு பதிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங்கை சுமார் 7 படங்களிலிருந்து சல்மான் கான் உள்ளிட்ட பலரின் சூழ்ச்சியால் நீக்கியதாகவும் ,எனவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சுஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ,அதுவே தற்கொலை செய்ய அவரை தூண்டியதாகவும் கூறி பீகாரில் உள்ள முசாபர்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான்,கரன்ஜோகர் , சஞ்சய் லீலா பன்சாலி ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது ஐபிசி சட்டப்பிரிவு 306,109,504,506 ஆகியவற்றின் கீழ் சுதீர் குமார் வழக்கு பதிவு செய்துள்ளார் . தற்போது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

4 hours ago