புதிய வகை கொரோனா பரவலால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

Published by
Rebekal

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை பரவிக் கொண்டிருந்தாலும், முன்புபோல் அல்லாமல் சற்று தளர்ந்து காணப்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த கொரோனா வைரஸை விடவும் அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. ஏற்கனவே கொரானா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்த நாட்டில் தற்பொழுது புதிய வகை கொரோனா வைரஸ் இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அங்கு உள்ள பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.

மேலும், நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளும் மூட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பள்ளிகள் பாதுகாப்பானவை அதை வலியுறுத்துவது மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். சில வாரங்களில் நாம் பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வண்டிய சூழ்நிலை வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago