இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு – கீவ் மேயர் அறிவிப்பு

Default Image

போர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு.

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கீவ் மேயர் அறிவித்துள்ளார். போர் பட்டம் நிலவி வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கடந்த 24 -ஆம் தேதி முதல் தொடர்ந்து 31-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபக்கம் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.

மறுபக்கம் ரஷ்யாவின் போர்க் கப்பலிலிருந்து உக்ரைன் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.= கடலில் நிலைநிறுத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க் கப்பலிருந்து உக்ரைனை நோக்கி Kalibar ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்படுகிறது. இந்த ஏவுகணைகள் உக்ரைனின் Zhytomyr நகரை குறிவைத்து ஏவப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan