கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தி வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்து மக்கள் வீடுகளில் இருக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியாது.
ஊரடங்கு பிறப்பித்தால் பொருளாதார பாதிப்பை என்று கூறுகிறார்.இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோவுக்கும், சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டாவை அதிபர் போல்சனரோ பதவி நீக்கம் செய்தார்.
பிரேசிலில் கொரோனாவால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் , 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…