ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜெர்மனியில் அதி தீவிரம் அடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு.

கொரோனா வைரசால் மிகவும் அதிக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஜெர்மனியில் 13,36,101 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,900 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மீண்டும் ஜெர்மனியில் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் இந்த ஊரடங்கை மிகவும் கடுமையாக பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் புதன் கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரக் கடைகள் போன்ற சில்லறை கடைகள் மூடப்படும். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று பட்டாசு விற்பனை மற்றும் பொது வெளிப்புற கூட்டங்களுக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை மூடப்படும். 14 வயது வரையிலான குழந்தைகளைத் தவிர்த்து, இரண்டு வீடுகளில் இருந்து அதிகபட்சம் ஐந்து பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago