அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியரின் பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு சாணம்!

Published by
Rebekal

அமெரிக்காவிற்கு சென்ற இந்தியர் ஒருவரிடம் இருந்து பை நிறைய மாட்டு சாணம் வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே மக்கள் தடுப்பூசி போடா வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விதிகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு முறைகளில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை முறையில் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்கவும் சில இயற்கையான வழிமுறை கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில ஆவி பிடிப்பது நாட்டு மருந்து வகைகளை உட்கொள்வது, கபசுரக் குடிநீர் குடிப்பது ஆகிய இயற்கை வழிமுறைகள் பெருமளவில் கையாண்டு வரப்படுகிறது.

ஆனால் ஒரு புறம் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதும், மாட்டு சிறுநீர் குடிப்பது கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் என பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இவை அனைத்தும் உடலுக்கு மேலும் சில நோய்களை வரவழைக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து இந்திய பயணி ஒருவரிடமிருந்து பை நிறைய வரட்டி எனும் மாட்டு சாணம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஏனென்றால் அமெரிக்காவில் மாட்டு சாணம் தடைசெய்யப்பட்ட ஒன்று. இந்த மாட்டு சாணம் மூலம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் தொற்று நோய் ஏற்படும் என்பதால் தான் இவை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு! 

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…

1 hour ago

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…

1 hour ago

பாஜகவை விட மோசம்…அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது..ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…

3 hours ago

தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…

3 hours ago

திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…

4 hours ago

“கை நீட்டி பேசாதீங்க., அது மரபல்ல..” அதிமுகவினரை கடிந்து கொண்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…

4 hours ago