உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை சீனா அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 வைரசால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வைரசால் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) உயிரிழப்பின் எண்ணிக்கை 1770-ஐ எட்டியுள்ளது. அதில் 105 பேர் நேற்று மட்டும் பலியாகியுள்ளனர். இது முந்தையவிட சற்று குறைத்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்தது 100 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஹூபேயில் இருந்து மட்டும் 1,933 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,548-ஆக உயர்ந்துள்ளது.
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…