இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மற்றும் ஆல்பா வகை கொரோனாக்களுக்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி சிறப்பாக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனை அடுத்து இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், நீடித்து செயல்படக்கூடியதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனையில் அறிகுறியுடன் கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த தடுப்பூசி 78% செயல்திறனுடன் இருக்கும் எனவும், கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இது 100% செயல்படும் என்றும், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70% செயல்படும் என்றும் இவர்களது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…