இங்கிலாந்து, நார்விச்சில் உள்ள UEA (University of East Anglia) இன் நார்விச் மருத்துவ கல்லூரியை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கார்ல் பில்போட் தலைமையில் ஓர் முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆராய்ச்சியின் படி, கொரோனா அறிகுறிகளாக கருதப்படும், சளி, இருமல் உடன் சுவை கண்டறியும் திறன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதுதான். அதாவது, கொரோனா உள்ளவர்களுக்கு சுவை கண்டறியும் திறன் மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஆராய்ச்சியில், சுவை இழக்கும் கொரோனா அறிகுறியானது, கடுமையான சளி இருமல் போல ஓர் முக்கிய கொரோனா அறிகுறியாகும். இது தொடர்பாக 10 சுவை இழந்த கொரோனா நோயாளிகளையும், 10 சளி இருமல் உள்ள கொரோனா நோயாளிகளையும் ஆராய்ச்சி குழு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.
இதன் மூலம், சுவை கண்டறியும் திறன் வெகுவாக குறைந்து, இனிப்பு, கசப்பு சுவை சுத்தமாக தெரியவில்லை என்றால், அந்த கொரோனா நோயாளிகளுக்கு தொற்று அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்த சுவை இழப்பை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கிடையே வித்தியாசம் காண முடியும்.
இச்சோதனை மூலம், உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத போதும், அவசர காலத்தில், திடீரென தீவிர கொரோனா நோயாளிகளை கண்டறிய இந்த சுவை இழப்பு சோதனை உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுவை இழந்து கொரோனா தீவிரமடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…