கொரோனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ப, கனடா பிரதமர் அவர்களின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில் தற்போது, கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை நான் உணர்கிறேன். இதை நான் என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது உடல் நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார். இவர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சிய்யில் ஆழ்த்துவதாக நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…