கொரோனாவின் பிடியில் இருந்து மீளும் உலகம்… குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்டது…

Published by
Kaliraj
உலகையே அச்சுறுத்தி வந்த,  சீனாவின் ஹூபேய் மாகாணத்தின்  வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய நோய்தொற்று தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி உலக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு  விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை  எட்டியுள்ளனர்.  இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் உலக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 2 கோடி 17 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரம்:
  • அமெரிக்கா – 41,08,179 பேரும்
  • இந்தியா – 39,42,42361 பேரும்
  • பிரேசில் – 37,20,312 பேரும்
  • ரஷியா – 8,90,114 பேரும்
  • கொலம்பியா – 6,10,078 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த கொடிய கொரோனா வைரஸ்  தாக்குதலுக்கு தற்போது வரை உலகம் முழுவதும்  9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Published by
Kaliraj

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

3 mins ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

57 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago