கொரோனாவின் பிடியில் இருந்து மீளும் உலகம்… குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்டது…

Published by
Kaliraj
உலகையே அச்சுறுத்தி வந்த,  சீனாவின் ஹூபேய் மாகாணத்தின்  வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய நோய்தொற்று தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி உலக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு  விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை  எட்டியுள்ளனர்.  இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் உலக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 2 கோடி 17 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரம்:
  • அமெரிக்கா – 41,08,179 பேரும்
  • இந்தியா – 39,42,42361 பேரும்
  • பிரேசில் – 37,20,312 பேரும்
  • ரஷியா – 8,90,114 பேரும்
  • கொலம்பியா – 6,10,078 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த கொடிய கொரோனா வைரஸ்  தாக்குதலுக்கு தற்போது வரை உலகம் முழுவதும்  9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Published by
Kaliraj

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

38 minutes ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

1 hour ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

1 hour ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

2 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

3 hours ago