எனக்கு கொரோனா வைரஸ்-ங்க…ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..!ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..!

Published by
kavitha

அண்டை நாடான சீனாவை கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா என்ற பெயர் கொண்ட வைரஸ் அச்சிறுத்தி வருகிறது.அங்குள்ள மக்கள் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டு கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25க்கும் அதிகமான நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

Image result for corona virus

இந்த கொடூர கொரோனா வைரசுக்கு இதுவரை மட்டும் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்து அடையாளம் கண்ட மருத்துவரும் தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் உலக நாடுகள் எல்லாம் கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இதனை எதிர்கொண்டு வருகிறது.

இவ்வாறு நாடே பரப்பராக இருக்கும் சமயத்தில் ரஷிய நாட்டில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதளபக்கத்தில் அதிக ‘லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறி உள்ளார். முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு அந்த ரெயிலில் பயணம் செய்துள்ள  டஸ்புரோவின் நடவடிக்கைகளை எல்லாம் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளார்.

அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலில் பயணிகள் அதிகமாக இருந்த இடத்தை நோக்கி வந்த அந்த  திடீரென மயங்கி பொத்தென்று விழுந்து வலிப்பு வருவது போல நடித்து உள்ளார். அங்கிருந்த அவருடைய நண்பர்கள் பயணம் செய்யும் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ‘கொரோனா, கொரோனா வைரஸ்’ என்று கூச்சலிட்டு கதறி உள்ளனர்.
என்னது கொரோனா கொடூரனா என்று அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் பீதியாகி  ரெயில் அடுத்த நிலையத்தை எப்பொழுது அடையும் என்று காத்து கொண்டிருந்த அவர்கள் அடுத்த நிலையத்தை ரெயில் அடைந்த உடன் அலறிடித்துக்கொண்டு ரெயிலை காலி செய்து வேகமாக ஓட்டம் பிடித்தனர்.ஆனால் இது ஒரு ‘பிராங் வீடியோ’ என்று கடைசியில் தெரியவரவே பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் டஸ்புரோவ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் போல நடித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்த வீடியோ அந்நாட்டு போலீசார் பார்வையில் சிக்கவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்பத்துதல், பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டஸ்புரோவை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர் நீதிமன்றட்த்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை வரும் வரை டஸ்புரோவை ஒரு மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்நிலையில் போலீசார் பதிவு செய்துள்ள குற்றப்பிரிவுகளில் அடிப்படையில் பயணிகளை பீதியடைய வைத்தற்காகவும் புரளியாக நடித்தர்காகவும் டஸ்புரோவுக்கு அதிகபட்ச சிறை தண்டனையாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

.

Recent Posts

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

29 minutes ago

டெல்லி தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் – அண்ணாமலை பேச்சு!

டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும்  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…

38 minutes ago

“அதை போட்டுட்டு நடிக்கவே மாட்டேன்” அந்த காரணத்துக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை உதறிய சாய் பல்லவி!

ஹைதராபாத் :  கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…

1 hour ago

‘இது மாதிரி சதத்தை பார்த்தது இல்லை’..கம்பீரை மிரள வைத்த அபிஷேக் சர்மா!

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…

2 hours ago

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

3 hours ago

டி20 கிரிக்கெட் தொடரில் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…

3 hours ago