அண்டை நாடான சீனாவை கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா என்ற பெயர் கொண்ட வைரஸ் அச்சிறுத்தி வருகிறது.அங்குள்ள மக்கள் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டு கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25க்கும் அதிகமான நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்த கொடூர கொரோனா வைரசுக்கு இதுவரை மட்டும் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்து அடையாளம் கண்ட மருத்துவரும் தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் உலக நாடுகள் எல்லாம் கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இதனை எதிர்கொண்டு வருகிறது.
இவ்வாறு நாடே பரப்பராக இருக்கும் சமயத்தில் ரஷிய நாட்டில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதளபக்கத்தில் அதிக ‘லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறி உள்ளார். முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு அந்த ரெயிலில் பயணம் செய்துள்ள டஸ்புரோவின் நடவடிக்கைகளை எல்லாம் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளார்.
.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…