ஒரே நாளில் 49 பேரை கொன்ற ஆட்கொல்லி கொரோனா…ஈரானில் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்வு ..!

Default Image

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  194 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் கொரோனா வைரஸால் 145 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது  இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து  தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  தாக்கத்தை அதிகமாக உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும்  அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 34 பேர் பாதிக்கப்பட்டதாக கூறிவந்த நிலையில் இன்று கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்