பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு உள்ள பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த பூங்காவில் நடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று காணப்பட்டது.
இதையடுத்து அந்த புலியை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பரிசோதனை முடிவுகள் ஏப்ரல் 5-ம் தேதி வந்த நிலையில், புலிக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த மேலும் நான்கு புலிகள் மற்றும் மூன்று ஆப்ரிக்க சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பூங்காவில் பணிபுரிந்து வந்த ஊழியரிடம் இருந்து பரவி இருக்கலாம் எனவும் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…