ஹோட்டலில் 20 பெண்களோடு தஞ்சமடைந்த மன்னர்-இதுவா!?? தனிமைப்படுத்துதல்.?தாளிக்கும் சர்வதேசம்

Published by
kavitha

கொரோனாவால் தன் நாடு சீரழிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள் மற்றும் பணியாட்களுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தாய்லாந்து மன்னர்  பற்றிய  தகவல்கள் வெளியாகி கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

உலகம் முழுவதும் தனது கொடூர மின்னல் வேகப்பரவல் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிக்கபடாத இந்த தொற்றுக்கு மருந்து தனிமைப்படுத்துதல் தான் என்கின்றனர் மருத்துவர்கள் அதாவது தன்னைத் தானே தனிமைப்படுத்துதல் இதுவே பரவும் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள்  மேற்கொள்ளும் வழியாகும்.அவ்வாறு மக்கள் தற்போது தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவை எதிர்த்து வருகின்றனர்.

மேலும் வெளியே செல்வதையும் தவிர்த்து வரும் நிலையிலும் இதன் பரவல் சற்று  குறைந்தப்பாடு இல்லை இந்நிலையில் நாடு முழுவது பரவியதன் விளைவாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் இதன் பரவலுக்கு தாய்லாந்தும் விதிவிலக்கா என்ன?தாய்லாந்தில் இதுவரை 1,651 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.மேலும் அவர்களுள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் மன்னர் ஆட்சி அனைவரும் அறிந்ததே அந்நாட்டு மன்னர் “வஜிராலங்கொர்ன்” ஜெர்மனியில் உள்ள ஆடம்பர சொகுசு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியது.மன்னர்  67 வயதாகும்  “வஜிராலங்கொர்ன்”  ஆன்பைன் என்ற ரிசார்ட்டில் இருக்கும் கிராண்ட் ஹோட்டல் சோனேன்பிச்சியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.தனிமைப்படுத்தல் நல்ல விஷயம் தான் ஆனால் மன்னர் தன்னை தனிமைப்படுத்திய விஷயத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.

இப்பகுதியில் மற்ற ஹோட்டல் எல்லாம் மூடப்பட்ட நிலையில் இந்த விடுதி மட்டும் திறந்து இருந்திருகிறது. கொரோனா அச்சத்தால் மற்றவர்கள் யாரும் ஹோட்டல் தங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்  ஹோட்டல் அறை முழுவதையுமே மன்னர்  புக் செய்து உள்ளார். அவ்வாறு மன்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக சென்ற ஹோட்டல் அவர் தனியாக செல்லவில்லையாம் பணியாட்கள், 20 பெண்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே உடன் கூட்டிச் சென்றுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் நூறுக்கும் மேற்பட்டோரை  திருப்பி அனுப்பிவிட்டதாம்.நட்சத்திர ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்த  தனது பரிவாளங்களோடு சென்ற  மன்னர் தன் 4 மனைவிகளையும்  அழைத்து சென்றாரா? என தெரியவில்லை. வழக்கம் போல ஏராளமான பணியாட்களோடு அங்கு சென்ற மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவே சென்றுள்ளார் என சர்வதேசத்தில் இருந்து விமர்சங்கள் பறக்கின்றன.

Recent Posts

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

40 minutes ago

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

1 hour ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

2 hours ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

2 hours ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

3 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

4 hours ago