கொரோனா அழிக்கப்படாமலும் போகலாம், அனால் கட்டுப்படுத்தப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் மைக் ரயான் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,429,235 பேர் உலகம் முழுவதும் பாதிக்க பட்டுள்ளதோடு, 298,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசும் மாநில அரசும் உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் மைக் ரயான் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த எதிர்மறையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறும் பொழுது, ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி கண்டறியப்பட்டாலும் அதன் வீரியத்தையும் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படும். தற்போது உள்ள நிலவரப்படி 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.
நம்முடைய சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பெயர்களுடன் பரவி வரக் கூடிய வைரஸ்களில் ஒன்று ஆக இந்த வைரசும் மாறலாம். இது முற்றிலும் அழியக்கூடிய நிலை ஏற்படாமல் போகலாம் என காணொளி வாயிலாக பேசியுள்ளார்.
மேலும் எச்ஐவி போன்ற வைரஸ்கள் இன்னும் அழிக்கப்படவில்லை ஆனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல இந்த வைரஸை அழிக்க முடியாமல் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு நிலையை அடையலாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பது தன்னால் நம்ப முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…