மலேசியாவில் பத்து மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உலகநாடுகள் தீவிரம் காட்டிவருகிறது.
இந்தநிலையில், மலேசியாவில் கொரோனாவைக் காட்டிலும், பத்து மடங்கு வேகமாகப் பரவும் தன்மையுடைய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். அதற்கு “D614G” என பெயரிட்டுள்ளனர்.
அந்த வைரஸ் தொற்று, தமிழகம், சிவகங்கையை சேர்ந்த நபருக்கு இந்த தொற்று உறுதியானதாகவும், மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், இந்த வகையான கொரோனா தொற்று, எளிதாகவும், பத்து மடங்கு வேகமாக பரவும் என தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இந்த D614G கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,200ஆக அதிகரித்துள்ளது.
அதில் 8,859 பேர் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…