கொரோனாவின் கோரத்தாண்டவம்.! உலகளவில் 1.5 கோடியை நெருங்க உள்ளது.!

Default Image

விடாத கொரோனா உலகளவில் 1.5 கோடியை நெருங்க உள்ளது. இந்நிலையில்  உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது.

தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,413,558 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,669,594 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 508,250 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்திற்குள் 5,48,318லிருந்து 5,66,840ஆக உயர்ந்துள்ளதாகவும்,மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து 3,34,822ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து 16,893ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்