கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு முடிக்கும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் கூறியுள்ளார்.
ஜீ 7 உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பில் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும், இல்லையென்றால் கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற பிற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் எனவும் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்பொழுது ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் கொரோனா மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு சார்பாக சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் அவற்றை கடைபிடியுங்கள் என கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…