கொரோனா தானாக அழிந்துவிடும் – WHO விஞ்ஞானி தகவல்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் நாளடைவில் தானாக அழிந்து விடும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு உருவான சார்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல செர்ஸ் 2012 ஆம் ஆண்டில் உருவாகி பல்லாயிரக்கணக்கானோரை உயிரிழக்க செய்தது. ஆனாலும், இந்த நோய்களுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருந்தபோதிலும் ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும்  நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அந்தக் கிருமிகளை போல கொரோனா சாதாரணமாக இல்லாமல் அதிக அளவு உயிர் பலிகளை வாங்கியுள்ளது. மட்டுமல்லாமல் விரைவில் பரவி வரும் தன்மை கொண்டுள்ளதால் இதற்கு இங்கிலாந்து சீனா இந்தியா அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் மருந்து மும்முரமாக கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனா மற்றும் இங்கிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனித உடலில் செலுத்தி ஆராய்ச்சி நடக்கிறது.

அது போல இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் குரங்கின் உடலில் செலுத்தி வைரஸ் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவ சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் வைரசுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டே வந்தாலும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

 இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமாகிய கரோல் சிகோரா இது குறித்து பேசிய போது,மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் நினைப்பதைவிட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினால் நோய்க்கிருமி படிப்படியாக அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago