ஒரே நாளில் உலகளவில் 2.31 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Default Image

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.31 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் 27,290,137 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 887,551 பேர் உயிரிழந்துள்ளனர், 19,374,017 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 231,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,129 பேர் உயிரிழந்துள்ளனர். 7,029,248 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்