சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா வைரஸ் – இங்லாந்து புலனாய்வு தகவல்..!

Default Image

கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்தின் புலனாய்வு முகமை தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,முதன்முதலில் கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை அறிய உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக,இங்கிலாந்தின் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆதாரம் திரட்டியுள்ளனர்.

இதனையடுத்து,கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நதீம் ஜகாவி வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து,பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு விசாரணையில்,கொரோனா வைரஸானது வௌவால்களின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

இருப்பினும் அதன்பின்னர்,மீண்டும் கொரோனா தோற்றம் குறித்து ஆய்வாளர்கள் உறுதி செய்த தகவல்களை சுட்டிகாட்டி, தி சண்டே டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்த செய்தியில்,கொரோனா முதன்முதலில் பரவிய இடமான சீனாவின் வுஹான் மார்க்கெட்,அந்நாட்டின் வைரஸ் ஆராய்ச்சி மையம் அருகே இருப்பதாகவும்,அதனால்,அந்த ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து,லண்டனில் உள்ள டெய்லி மெயில் என்ற பத்திரிக்கையானது,சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை உருவாக்கினார்கள் என்றும்,பின்னர் அதனை இயற்கையாக வௌவால்களிலிருந்து உருவானது போல காட்டுவதற்காக மறுஉருவாக்கம் செய்ததாகவும் தனது இதழில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்