அமெரிக்க மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு கொரோனா தடுப்பூசி..!

Default Image

அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு பரிசோதனை நோக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓக்லாண்ட் மிருக காட்சி சாலையில் இருக்கும் புலிகள் மற்றும் கரடிகளுக்கு பரிசோதனை நோக்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜிஞ்சா, மோலி ஆகிய 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த மலை சிங்கங்கள், மரநாய்கள், கரடிகள் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது. சான் டீகோ மிருகக்காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணத்தால் ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்