அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்க அதிபர் டிரம்ப் அரசு போராடி வருவதாக அவரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் காணொளி மூலம் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமது கணவர் டிரம்ப் முன்னேற்றத்தை உருவாக்கும் திறமை படைத்தவர் என கூறினார்.
மேலும் பேசிய அவர், அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர் அதிபர் டிரம்ப் என கூறிய அவர், கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்கர்கள் அனைவருக்கும் கிடைக்க டிரம்ப் அரசு போராடி வருவதாகவும், இன்னும் நான்காண்டுகளுக்கு
டிரம்ப் அதிபராக தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு மேலும் பலனளிக்கும் என தெரிவித்தார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…