மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி மேக்னா ராஜூக்கு கடந்த அக்டோபர் 22-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது .பலரும் குட்டி சிரஞ்சீவி சார்ஜா பிறந்துள்ளார் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் தற்போது மேக்னா ராஜின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னா ராஜ் அறிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,என் அம்மா, அப்பா, எனக்கும் மற்றும் என் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் எங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தெரிவித்துவிட்டோம்.
சிருவின் ரசிகர்களும், எனது ரசிகர்களும் கவலை கொள்ள வேண்டாம். தற்போது நாங்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கோண்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.மேலும் குட்டி சிரஞ்சீவி நலமாக இருக்கிறார். ஒரு குடும்பமாக நாங்கள் இந்தப் போரில் போராடி, வெற்றியுடன் வெளியே கண்டிப்பாக வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…