அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலை குறைக்க பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 11 ஆயிரமாக இருந்த கொரோனா பரவல் தற்போது ஒன்றரை லட்சமாக கடந்து சென்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 1,490 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,76,645 கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 61,538 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 4 கோடியே 06 லட்சத்து 97 ஆயிரத்து 726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…