கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த ‘ஸ்பேல்லீங் பி’ போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், 1-8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து வாகை சூடி வந்தனர்.
இந்த ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி அடுத்த மாதம் (மே) நடைபெற இருந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியை ரத்து செய்வதாக போட்டியை நடத்தி வரும் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…