பிரான்ஸை மீண்டும் குறிவைக்கும் கொரோனா! நூதன போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சில நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும், மீண்டும் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதானால், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது ஒரு லட்சம் பேருக்கு 250 பேருக்கு தொற்று பாதிப்பு என்ற அளவில் உள்ளது.

இதனையடுத்து, உணவகங்கள், பார்களை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசின் நடவடிக்கையை கண்டித்து கையில் கருப்புப் பட்டை அணிந்தும், கரண்டிகளால் தட்டுகள், பாத்திரங்களில் அடித்து ஒலி எழுப்பியும் தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan
rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price