பேசுவதன் மூலம் பரவும் கொரோனா.! சத்தமா பேசுனா இன்னும் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. இதனை சமிழக முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. மேலும், வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை அடிக்கடி சுத்த செய்வதை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேசுவதன் முலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, பேசும்போது எச்சில் உமிழ் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, மக்களை பேச வைத்து சோதனை செய்ததில் சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர், சில நபர்கள் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரவுவதும் தெரியவந்தது. 

இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்து கொண்டிருப்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆகையால், இருமல், தும்மல் போலவே, பேசுவது மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுவது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள், சாதாரணமாக பேசுவதன் மூலமே கொரோனாவை பரப்பமுடியும் என்பதால், மாஸ்க் அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

22 minutes ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

34 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

2 hours ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

3 hours ago