அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த கொரோனா! 63 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

அமெரிக்காவை தொடர்ந்து தாக்கும் கொரோனா. 63 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை.
முதலில் சீன நாட்டை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரசால், உலக அளவில் இதுவரை, 3,308,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 234,108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்த வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கையிலும், இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
அமெரிக்க நாட்டில், இதுவரை 1,095,210 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 63,861 பேர் இந்த நோய் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் இந்த வைரஸ் நோயால், 2,201 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அமெரிக்காவையே அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.