பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு செய்யப்பட்ட நான்காவது பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது.
கடந்த ஜூலை 7 -ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டது. அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா கடந்த ஒரு வாரத்திற்கு முன் 3-வது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், கொரோனா தொற்றிலிருந்து இன்னும் போல்சனாரோ மீளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நான்காவது சோதனையின் முடிவில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது.
இதையடுத்து, போல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைவருக்கும் இனிய காலை வணக்கம்” என்று கூறி பின்னர், கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…