ரஷ்யாவில், கடந்த ஆறு நாட்களில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டிபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கான எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில், கடந்த ஆறு நாட்களில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவில் இதுவரை, 187,859 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,723 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…