பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,064 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அதன் தீவிரம் சற்று குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
அதேபோல் கொரோனா உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 41,714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,04,57,897 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் ஒரே நாளில், 1,064 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,71,662 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…