பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 1,064 பேர் பலி..!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,064 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அதன் தீவிரம் சற்று குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
அதேபோல் கொரோனா உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 41,714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,04,57,897 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் ஒரே நாளில், 1,064 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,71,662 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025