சிரிய அதிபர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று…!

Default Image

சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வருகிற நிலையில், உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்துள்ளது. தற்போது தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிபர் அலுவலகம் கூறுகையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத்-க்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்