அதிர்ச்சி : நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Default Image

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் சமீப நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்