சிங்கப்பூரில் 481 பேருக்கு கொரோனா தொற்று! 50,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

Default Image

சிங்கப்பூரில் 481 பேருக்கு கொரோனா தொற்று.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,418,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 652,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,047,304 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேருக்கு மட்டுமே சமுதாய பரவல் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 476 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்து, குடியிருப்புகளில் தங்கி பணிபுரிபவர்கள் ஆவர்.

 இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,369-ஆக  உயர்ந்துள்ளது. மேலும், 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ள  நிலையில், 45,352 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்