அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை விட்டு தற்போது விலகியுள்ளது. ஆனால் அங்கு ஆரம்பித்த வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவி உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், உயிரிழப்பும் உலகளவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. உலக முழுவதும் இதுவரை கொரோனாவால் 22,50,790 பேர் பாதிக்கப்பட்டு, 1,54,266 பேரை கொன்றுள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகப்படியாக தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். ஆனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தினந்தோறும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,10,021 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,158 ஆக அதிகரித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…