20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி.! பதறும் இங்கிலாந்து.!

Default Image

இங்கிலாந்தில், நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 768-ஆக உயர்ந்து, இதுவரை 19,506 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸை அளிக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரஸால் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது.

இங்கிலாந்து நாட்டிலும் இந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனாவால் அந்நாட்டில் 1,43,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டுமே 5,386 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 768-ஆக உள்ளது. இதுவரை 19,506 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்