கொரோனா பயமின்றி மக்கள் செல்வனை காண குவிந்த மக்கள்.!

Published by
Ragi

விஜய் சேதுபதியின் லாபம் படப்பிடிப்பு தளத்தில் கிருஷ்ணகிரி கிராம மக்கள் கொரோனா பயமின்றி மக்கள் செல்வனை காண குவிந்தனர் .

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது . கடந்த 10 நாட்களாக கிருஷ்ணகிரியில் வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதனை காண ஏராளமான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ,முக கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் மோதி கொண்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . ஏற்கனவே தமிழக அரசு படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், படப்பிடிப்பானது 100 பேர் கொண்டு மட்டுமே நடத்தவும் அனுமதி வழங்கியிருந்தது .

ஆனால் விஜய் சேதுபதி தங்கியிருந்த ஓட்டல் உட்பட படப்பிடிப்பு தளத்திலும் அவரை காண ஏராளமான மக்கள் அலை மோதினர் .மேலும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்பவர்கள் முககவசம் அணியவில்லை என்றும் , அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

laabam

மேலும் படத்தின் கதாநாயகியான ஸ்ருதிஹாசன் 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .அதன் பின் நடிக்க விருப்பமில்லை என்று கூறி விலகி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.அவர் கொரோனா அச்சம் காரணமாக தான் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் ஜனநாதன் கூறுகையில், ஷூட்டிங்கை காண்பதற்கு ஏராளமான மக்கள் வருவதாகவும், அவர்களை கட்டுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.மேலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருவதாகவும்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறினார்.

Published by
Ragi

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

34 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

1 hour ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago