பிரபல இயக்குநரின் வீட்டில் நுழைந்த கொரோனா.! தன்னை தானே தனிமைப்படுத்தல்.!

Default Image

கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் கூட பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து வீடு முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது மட்டுமில்லாமல் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்