உலக முழுவதும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களை கொன்று தீர்த்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், போதிய முககவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவுகிறது. வைரஸ் பரவிய நபர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைப்பு கூறுகையில், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பரவுவதாகவும், அதே சமயம் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…