உலகம் முழுவதும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா.!

Default Image

உலக முழுவதும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களை கொன்று தீர்த்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாக பரவிவருகிறது. 

இந்நிலையில், போதிய முககவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவுகிறது. வைரஸ் பரவிய நபர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைப்பு கூறுகையில், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பரவுவதாகவும், அதே சமயம் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்