கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 827 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இத்தாலி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஓன்று சிறைகளில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இத்தாலி உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் கைதிகளின் உறவினர்களும் சிறைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் கலவரத்தில் ஏற்படுத்தி தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த 09-ம் தேதி இத்தாலி முழுவதும் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 12 கைதிகள் இறந்த நிலையில் 40 காவலர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 16-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…