கொரோனா எதிரொலியால் .. சிறையில் இருந்து 16க்கும்மேற்பட்ட கைதிகள் ஓட்டம்..

Default Image

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி  4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 827 பேர் இறந்துள்ளனர்.

 கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இத்தாலி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஓன்று சிறைகளில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இத்தாலி உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் கைதிகளின் உறவினர்களும் சிறைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் கலவரத்தில் ஏற்படுத்தி  தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த 09-ம் தேதி இத்தாலி முழுவதும் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 12 கைதிகள் இறந்த நிலையில் 40 காவலர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 16-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்