கொரோனா எதிரொலி : சுற்றுலா தளமான ஈபிள் டவரை பார்வையிட அதிரடி தடை.!

Default Image

உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தளமான இருக்கும் ஈபிள் டவரை பார்வையிட முற்றிலும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கொரோனவால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000க்கும் மேலானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக ஓரிடத்தில் அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே அங்கு தடை விதித்துள்ளது. இதேபோல் பாரிஸில் உள்ள மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்