ஐரோப்பாவில் 75 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

Default Image

கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்தது. 

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணாக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது உலக அளவில், 1,853,168 பேரை பாதித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால், 114,248 பேர் உலக அளவில் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 80 சதவீதத்தினர் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் இறந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்