பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு தற்போது 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு 45 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 57.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 87.5 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,65,63,43,750.00 ஆகும்.
அந்நிறுவனம் புதியதாக 50 பேர் வரை வீடியோ அழைப்பில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…