பிருத்விராஜ் “ஆடுஜீவிதம்” படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமீபத்தில் ஜோர்டானிலிருந்து திரும்பினார். பின் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிருத்விராஜ் புதிய படமான ‘ஜன கண மன’ படப்பிடிப்பில் நடிக்க சென்றார்.
ராணி படத்திற்குப் பிறகு திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய படம் ‘ஜன கண மன’ படத்தின் முதல் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று நிறைவடைந்தது. முதல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கொரோனா சோதனை செய்தபோது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், தற்போது கொச்சியில் உள்ள அதே ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார். இதன் மூலம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரித்விராஜ் வெளியிட்ட அறிக்கையில், நான் தனிமையில் இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…